search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை கடை மேலாளர் பலி"

    மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் நகை கடை மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாயப்பனூர் ரோட்டில் உள்ள மகாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பிரதீஸ்பாபு. (வயது 36). இவர் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் உள்ள நகைக்கடையில் மானேஜராகப் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல் கடையில் வேலை முடிந்து வீட்டிற்கு தனது இரண்டு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில் காந்திபுரம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கின் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக திடீர் என இரண்டு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீஸ் பாபுவை அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலே இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×